இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில அரசும் உலக அளவிலான திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து,அதிக செலவு செய்து நடத்திக்கொண்டிருக்கிறது...அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கோவா திரைப்படவிழா,திருவனந்தபுரம் திரைப்பட விழா....Etc...
ஆனால் உலக அளவில் முன்னேறிக்கொண்டிருக்கும் அளவுக்கு தமிழ் சினிமா இருக்கும் இந்த நிலையிலும் கூட ஏன் தமிழக அரசாங்கம் இதை செய்ய யோசிக்கிறது என்று தான் தெரியவில்லை...சென்னை திரைப்பட விழாவில் எஸ்.வி.சேகர் அவர்கள் பேசிய போது மிகுந்த வேதனையாக இருந்தது...
தனியாக அவர்களே ஒரு அமைப்பை ஏற்படுத்தி Sponsers மூலம் படங்களை வெளி நாடுகளில் இருந்து கொண்டு வந்து,வெளி நாட்டு இயக்குனர்களை வரவழைத்து அவர்களுக்கு ஏற்ற அனைத்து செலவுகளையும் sponsers மூலம் செய்திருக்கிறது...அந்த அளவுக்கு இங்கு என்ன இல்லாமல் போய் விட்டது என தெரியவில்லை...
தமிழ் சினிமாவுக்கு வரி விலக்கை கொண்டு வந்த முதல்வர் கலைஞர் அவர்கள் இதற்கும் ஏதாவது செய்தால் எளிதாக உலகெங்கும் தமிழ் சினிமா முத்திரை பதிக்கும் என்பதில் ஐயமில்லை...
Comments