டிசம்பர் 20

டிசம்பர் 20:

சோம்பல் யாரைதான் விட்டது முந்தைய நாளின் பாதி தூக்கம் அடுத்தநாள் விடியலை தள்ளிப்போட்டது... 1.30 மணிக்கு சன்னமாக உள்ளே நுழைந்தோம்...படம் தலை கால் புரியாமல் இருந்தாலும் நன்றாக தன் இருந்தது...படத்தின் பெயர் PIERRE THE MAD என்ற பிரெஞ்சு படம்...படத்தின் முடிவில் நாயகன் புதை குழியில் புதையும் நேரத்தில் ஒருவர் உதவிக்கு வர அதை வேண்டாமென மறுத்து விட்டு இறந்து போகிறார்...ஒரு வேலை கடன் ஏதாவது வாங்கி இருப்பார் என நினைக்கிறேன்...திடீரென அவனது இரு நண்பர்களும் தூக்கு மாட்டிக்கொள்கிறார்கள்...

ஏன் எதற்கு என ஒனும் புரியாமல் மண்டயைக்கொடைந்து கொண்டிருக்க என் நண்பன் "சார் இந்த படத்தோட கதை என்ன " அப்படி ஒருவருடன் கேட்க அவர் எங்களை ஒரு மாதிரி பார்க்க அப்படியே தலையில் துண்டை போட்டுக்கொண்டு வெளியே வந்தோம்...நான் நினைக்கிறேன் ஒரு வேலை அவரும் எங்களை போலவே லேட் ஆகா வந்திருப்பாரோ? அடுத்த முறை பார்த்தல் கண்டிப்பாக கேட்பேன்....(அவர் அடிக்காமல் இருந்தால்)




அடுத்த படம் Landscape No.2 என்ற Slovakia படம்...இதும் கிட்டதட்ட தமிழ் படம் மாதிரி தான் ஒரு பக்கம் ஒரு மனைவி மறு பக்கம் இன்னொரு பெண் என சுற்றும் நாயகனிடம் சிக்குகிறது ஒரு ஓவியம் மற்றும் ஒரு முக்கியமான அரசாங்க ஆவணம்...அதனால் அவனை சுற்றி இருக்கும் அனைவரும் கொல்லப்படுகிறார்கள்...படத்தின் முடிவில் நாயகனை கொல்லவரும் வில்லன் ஆவணங்களை நெருப்பில் போட்டு விட்டு ஏன் தானே குழியில் விழுந்து இறக்கிறார் என்பது தான் தெரியவில்லை...இதில் பாவம் அதனை கொலைக்கான பழி நாயகன் மீது விழவே நாயகன் கைது செய்யப்படுகிறார்..ஹயோஒ பாவம்...

Comments