திரைப்பட விழாக்களில் தமிழ்ப் படங்கள் பங்கு பெறுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில் மணிரத்னம் கௌரவப்படுத்தப்பட்டார்.பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், பசங்க போன்ற படங்கள் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றன.
வரும் அக்டோபர் மாதம் தெற்காசிய திரைப்பட விழா நடக்கிறது. இத்திரைப்பட விழாவில் பங்கு பெறுவது மரியாதைக்குரியதாக கருதப்படுகிறது.
இந்தத் திரைப்பட விழாவில் திரையிட எஸ்.பி.பி.சரண் தயாரித்திருக்கும் ஆரண்ய காண்டம் திரைப்படம் தேர்வாகியிருப்பது தமிழ்த் திரையுலகுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.
தெற்காசிய திரைப்பட விழாதைத் தொடர்ந்து மேலும் சில தமிழ்ப் படங்கள் திரையிட தேர்வாகும் வாய்ப்பும் உள்ளது. |
Comments